மரித்தாரே என் ஆண்டவர்

1. மரித்தாரே என் ஆண்டவர்,
சிலுவையில் தானே;
மரித்தாரே என் ரட்சகர்,
ஆ, எனக்காகவே.

2. சிலுவைமீது ஜீவனை
என் மீட்பர் விட்டாரே;
எனக்குத்தான் இப்பலியைச்
செலுத்தி மாண்டாரே.

3. நான் எண்ணி எண்ணி வருகில்,
என் நேசம் ஊக்கமாய்
கொழுந்து விட்டென் நெஞ்சத்தில்
எரியும் பக்தியாய்.

4. என் மீட்பர் இயேசு கிறிஸ்து தாம்
இவ்வருள் செய்தாரே;
நான் என்ன பதில் செய்யலாம்?
ஈடொன்றுமில்லையே.

5. என் தேகம், செல்வம், சுகமும்,
என் ஜீவன் யாவுமே
சுகந்த பலியாகவும்
படைப்பேன் இயேசுவே!

Start Downloading Your Apps