ஆவியை மழைபோலே யூற்றும்‌

ஆவியை மழைபோலே யூற்றும்‌,-பல
சாதிகளை யேசு மந்தையிற்‌ கூட்டும்‌.

பாவிக்காய்‌ ஜீவனை விட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர்‌ பேசியே இறங்கிடச்‌ செய்யும்‌. -ஆவியை

சரணங்கள்‌

1. அன்பினால்‌ ஜீவனை விட்டீர்‌,-ஆவி
அருள்‌ மாரி பொழியவே பரலோகஞ்‌ சென்றீர்‌;
இன்பப்‌ பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச்‌ சேரும்‌. - ஆவியை

2. சிதறுண்டலைகிற ஆட்டைப்‌-பின்னும்‌
தேடிப்‌ பிடித்து நீர்‌ தூக்கிச்‌ சுமந்து,
பதறாதே நான்தான்‌ உன்‌ நல்மேய்ப்பன்‌ யேசு
பாக்கியரென்னும்‌ நல்‌ வாக்கையருளும்‌. -ஆவியை

3. காத்திருந்த பல பேரும்‌-மனங்‌
கடினங்கொள்ளா முன்னே உம்‌ பாதஞ்‌ சேரும்‌;
தோத்திரக்‌ கீதங்கள்‌ பாடிப்‌ புகழ்ந்து
சுத்தலோகம்‌ வரத்‌ தூயாவி ஊற்றும்‌. - ஆவியை

4. தோத்திரக்‌ கீதங்கள்‌ பாடி-எங்கும்‌
சுவிசேஷ ஜெயத்தையே நிதம்‌ நிதம்‌ தேடிப்‌
பாத்திரராக அநேகரெழும்பப்‌
பரிசுத்த ஆவியின்‌ அருள்மாரி ஊற்றும்‌. -ஆவியை

- அருளானந்தம்‌

Start Downloading Your Apps