ஐயையா நான்‌ வந்தேன்‌

ஐயையா, நான்‌ வந்தேன்‌;-தேவ
ஆட்டுக்குட்டி, வந்தேன்‌.

சரணங்கள்‌

1. துய்யன்‌' நீர்‌ சோரி பாவி எனக்காய்ச்‌ சிந்தித்‌
துஷ்டன்‌ எனை அழைத்தீர்‌,-தயை
செய்வோம்‌ என்றே; இதை அல்லாது போக்கில்லை;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்‌. - ஐயையா

2. உள்ளக்‌ கறைகளில்‌ ஒன்றேனும்‌ தானாய்‌
ஒழிந்தால்‌ வருவேன்‌, என்று-நில்லேன்‌;
தெள்‌ உம்‌ உதிரம்‌ கறை யாவும்‌ தீர்த்திடும்‌;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்‌. - ஐயையா

3. எண்ணம்‌, வெளியே போராட்டங்கள்‌, உட்பயம்‌
எத்தனை, எத்தனையோ! - இவை
திண்ணம்‌ அகற்றி எளியனை ரட்சியும்‌;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்‌. - ஐயையா

4. ஏற்றுக்கொண்டு மன்னிப்‌ பீந்து சுத்திகரித்‌
தென்னை அரவணையும்‌;-மனம்‌
தேற்றிக்கொண்டேன்‌ உந்தம்‌ வாக்குத்தத்தங்களால்‌;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்‌. - ஐயையா

5. மட்டற்ற உம்‌ அன்பினால்‌ தடை எதும்‌
மாறி அகன்றதுவே,-இனி
திட்டமே உந்தம்‌ உடைமை யான்‌ என்றென்றும்‌
தேவாட்டுக்குட்டி, வந்தேன்‌ - ஐயையா

- அருள்திரு. ௮. வேதக்கண்‌

Start Downloading Your Apps