சுபஜெய மங்களமே நித்திய

சுபஜெய மங்களமே-நித்திய சுபஜெய மங்களமே,
சுகமே-தரவே-புவிமீ-துயிர்த்தசுதனேசு நாதருக்கே.

சரணங்கள்‌

1. தீர்க்க ருரைத்தனரே,-இன்று
ஜேசு உயிர்த்தனரே;
ஜெகதீஸ்‌-பரனார்‌-சுதனார்‌-கிறிஸ்து
ஜெயமா யெழுந்தவர்க்கே - சுப

2. தூதர்‌-சங்க முழங்க,-வானம்‌
ஜோதியினு லிலங்கத்‌
துரிதாய்ப்‌-பரனார்‌-களிகூர்ந்‌-திடவே
தொனியா யெழுந்தவர்க்கே. - சுப

3. அங்கங்‌ குளிர்ந்திடவே,-உல
கெங்கும்‌ மகிழ்ந்திடவே,
அடியா-ருடசா-வுடகூ-ரொடித்து
அகில மெழுந்தவர்க்கே. - சுப

4. காலையிலே எழுந்து-நிதம்‌
கர்த்தனையே நினைத்துக்‌,
கரமே-குவித்துத்‌-துதிபா-டிடவே
காலை யிலெழுந்தவர்க்கே. - சுப

5. ஆனந்தம்‌ பாடிடவும்‌,-பரன்‌
அன்பைக்‌ கொண்டாடிடவும்‌,
அசையா-நிலையோ-டெழுந்து-தொழவே
அருள்‌ கூர்ந்திடு பவர்க்கே. - சுபா

6. எக்காளமே தொனிக்க-பக்தர்‌
யாவருமே யெழும்ப,
இனிதாய்‌-அரசா-ளவுமேயுலகில்‌
எழு மிம்மானு வேலர்க்கே. - சுப

- ஆ.ஐ. பிச்சைமுத்து!

Start Downloading Your Apps