இப்போது நேச நாதா தலை

பிதாவே, உம்முடைய கைகளில்
என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.

1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது;
பொங்கு நெஞ்சம் மூச்சற் றொடுங்கிற்றே.

2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம்
நீர் தாங்கி, மனதார மரித்தீர்;
உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும்
அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர்.

3. நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து,
மரண அவஸ்தை உண்டாகையில்,
தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து
ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.

4. நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்;
என் தலையை உம் மார்பில் அணைத்தே
என் கடை மூச்சை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்
அப்பால் உம் நித்திய ஓய்வு என்னதே

Start Downloading Your Apps