நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

சரணங்கள்

1. செங்கடல்தனை நடுவாய்ப் பிரித்த எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும் தயவாய் மாதயவாய்- நன்றி

2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய - மாபெருங்கிருபை
மாநிலத்தோர்க் கீந்தார் இயேசு சுவிசேஷ ஒளியாய் - நன்றி

3. உயிர்ப்பித்தே உயத்தினார் உன்னதம் வரை உடன் சுதந்தரராயிருக்க
கிருபையாய் ஈவாய் வரும் காலங்கள் விளங்க ஒளி விளங்க- நன்றி

4. அழைக்கப்பட்டோரே உன்னத அழைப்பினை அறிந்தே வந்திடுவீர்
அளவில்லாத்திரு ஆக்கமிதனை அவனியோர்க்களிப்பீர்- நன்றி

5. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய் சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே இயேசுவின் முகமே - நன்றி

Start Downloading Your Apps