உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்

உம்மைத்‌ துதிக்கிறோம்‌, யாவுக்கும்‌
வல்ல பிதாவே;
உம்மைப்‌ பணிகிறோம்‌, ஸ்வாமி,
ராஜாதி! ராஜாவே;
உமது மா
மகிமைக்காக, கர்த்தா,
ஸ்தோத்திரம்‌ சொல்லுகிறோமே.

2. கிறிஸ்துவே, இரங்கும்‌; சுதனே,
கடன்‌ செலுத்தி,
லோகத்தில்‌ பாவத்தை நீக்கிடும்‌
தெய்வாட்டுக்குட்டி,
எங்கள்‌ மனு
கேளும்‌; பிதாவினது
ஆசனத்‌ தோழா, இரங்கும்‌.

3. நித்திய பிதாவின்‌ மகிமையில்‌
இயேசுவே நீரே,
பரிசுத்தாவியோடேகமாய்‌ ஆளுகிறீரே.
ஏகமாய்‌ நீர்‌,
அர்ச்சிக்கப்படுகிறீர்‌.
உண்னத கர்த்தரே. ஆமேன்‌.

Start Downloading Your Apps