என்னை ஜீவபலியாய்‌ ஒப்பு

என்னை ஜீவபலியாய்‌ ஒப்புவித்தேன்‌,
ஏற்றுக்‌ கொள்ளும்‌, யேசுவே.

அன்னை தந்தை உந்தம்‌ சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது, இப்போது - என்னை

சரணங்கள்‌

1. அந்தகாரத்தி னின்றும்‌, பவப்‌ பேய்‌
அடிமைத்‌ தனத்தி னின்றும்‌
சொந்த ரத்தக்‌ கிரயத்தால்‌ எனைமீட்ட
எந்தையே, உந்தனுக்கிதோ! படைக்கிறேன்‌. - என்னை

2. ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்‌;
பாத்ரமதாய்‌ அதை பாவித்துக்‌ கொள்ளக்‌
காத்திருக்கின்றேன்‌; கருணைசெய்‌, தேவா. - என்னை

3. நீதியி னாயுதமாய்‌ அவயவம்‌
நேர்ந்து விட்டேன்‌ உமக்கு;
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த்‌ தந்தேன்‌ என்றன்‌ சரீரத்தை. - என்னை

- அருள்திரு. ச.சீமோன்‌

Start Downloading Your Apps