கனம், கனம் பராபரன்

கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனே
தினம்! தினம் கீர்த்தனம் ஜெயம்! ஜெயம்! லீதோத்திரம்

சரணங்கள்

1.வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அற.
கனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர்- கனம்

2 அன்னாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும்
இன்னா ஞாயங் கூறியே, எதிர்த்து தீர்ப்பதிட்டனர்- கனம்

3.ஞாய சங்க மீதிலே நாதனைச் சினந்ரெரு
தீய பாவிதான் அவர் திரு முகத்தறைந்தனன் -கனம்

4. ஆகடியமாக முக் காட திட்டிராவெல்லாம்-கனம்
ஏசுனைப் பரிகாசமாய் ஈனர் குட்டவும் செய்தார்-கனம்

5. கைச்சரசம் பண்ணினார்; காவல் மீதிருத்தினார்
அச்சமற்ற கந்தையாய் அநக தூஷணஞ் சொன்னார்-கனம்

6. சங்க மீதிரண்டு பொய்ச் சாட்சிகள் எழுந்துமே
பங்கமான தோதினும், பரிந்து கேட்டிருந்தனர் -கனம்

7.பெத்தரிக்கமாகவே பேதுரு அப்போஸ்தலன்
சத்தியங்கள் பண்ணியே தான் மறுதலித்தனன்-கனம்

8.கஸ்தியதுறச் சொல்லி, கனன் றெழுந்து ஆரியன்
வஸ்திரம் கிழித்துமே, மரணத் தீர்ப்பியற்றினன்-கனம்

Start Downloading Your Apps