மகிழ்ச்சி ஓய்வுநாளே

மகிழ்ச்சி ஒய்வுநாளே!
பூரிப்பு ஜோதியாம்‌;
கவலை துக்கம்‌ போக்கும்‌
மா பாக்கிய நல்நாளாம்‌;
மாந்தர்‌ குழாம்‌ இந்நாளில்‌
சேர்ந்தே ஆரதிப்பார்‌!
மா தூயர்‌ தூயர்‌ தூயர்‌
திரியேகர்‌ பணிவார்‌.

2. முதலாம்‌ சிஸ்டி ஜோதி
இந்நாளில்‌ தோன்றிற்றே;
தம்‌, சாவை வென்று மீட்பர்‌
இந்நாள்‌ எழுந்தாரே;
தம்‌ ஆவி வெற்றி வேந்தர்‌
இந்நாளில்‌ ஈந்தாரே;
ஆ! மாட்சியாம்‌ இந்நாளில்‌
மூவொளி வந்ததே.

3. இப்பாழ்‌ வனாந்தரத்தில்‌
நீ திவ்விய ஊற்றேயாம்‌
உன்னின்று மோட்சம்‌ நோக்கும்‌
பிஸ்கா சிகரமாம்‌;
ஆ! எம்மை முசிப்பாற்றும்‌
நல்‌ அன்பாம்‌ நான்‌ இது;
மண்ணின்று விண்ணில்‌ ஏற்றும்‌
புத்துயிர்‌ நாள்‌ இது.

4. செல்வோம்‌ புத்தருள்‌ பெற்று
இவ்வோய்வு நாளிலே
மெய்பக்தர்‌ மோட்ச லோக
மா பாக்கிய ஓய்வுக்கே
பிதா சுதன்‌ சுத்தாவி
எம்‌ ஸ்தோத்ரம்‌ பெறுவீர்‌;
சபையின்‌ நாவால்‌ கீதம்‌
திரியேகரே ஏற்பீர்‌.

Start Downloading Your Apps